"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆதரவாக நிற்போம்" : கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆதரவாக நிற்போம்" : கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆதரவாக நிற்போம் : கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
x
சபரிமலையில் பெண்களுக்கு தரிசன அனுமதி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் அதிருப்தியடைந்த பெண்கள் கேரளாவில் பல பகுதிகளிலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக சில நிகழ்ச்சிகளோடு களத்தில் இறங்கியுள்ளது. முதல் நிகழ்ச்சியாக பெண்களின் உரிமை பாதுகாப்பு சங்கமம் என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பு சார்பில்  பத்தணந்திட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் முக்கிய நிர்வாகி எம்.பி. ஸ்ரீமதி, சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு துணையாக மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் எனவும் ஓட்டுகளுக்காக பெண்களின் உரிமைகளை இழக்க விடமாட்டோம் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்