கண்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்த மூதாட்டி பிணம் - பொதுமக்கள் அதிர்ச்சி

கண்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்த மூதாட்டி பிணம் - பொதுமக்கள் அதிர்ச்சி
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்த மூதாட்டி பிணம் - பொதுமக்கள் அதிர்ச்சி
x
ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி பிணம் ஒன்று மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்தகோட்டா என்ற இடத்தில் மூதாட்டியின் பிணம் மிதந்து வந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இது குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார், உடலை மீட்டு, ஒசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி யார், அவர் எப்படி இறந்தார், தற்கொலை செய்திருப்பாரோ, அல்லது கொலை செய்யப் பட்டிருப்பாரோ  என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்