தண்ணீரில் மூழ்கியபடி ரயில்வே சுரங்க பாதையை கடக்கும் பொதுமக்கள்
ராமநாதபுரம் அருகே லாந்தை மற்றும் கருங்குளம் பகுதிகளில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
லாந்தை மற்றும் கருங்குளம் பகுதிகளில் உள்ள ரயில்வே சுரங்க பாதை வழியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியபடி அப்பாதையை கடந்து செல்கின்றனர். தேங்கிய தண்ணீர் அகற்றப்படாததால் சாலை மறியலில் ஈடுபட கிராம மக்கள் முயன்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story