நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது திடீர் தாக்குதல்

பீர் பாட்டிலால் குத்தியதால் பரபரப்பு
நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது திடீர் தாக்குதல்
x
ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சக்திவேல், ஓசூரில் வேலைசெய்து வருகிறார்.ஓசூரில்  இருந்து சேலம் வந்த அவர், வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலால் முதுகில் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.  இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  5 இளைஞர்கள் நேற்று இரவு  4 இடங்களில் வழிப்பறி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சேலம் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்