கிறிஸ்தவ ஆலயத்தில் பெண் குழந்தை மாயம் - குழந்தையை அழைத்து சென்ற பெண் யார்?

சென்னை குரோம்பேட்டை கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட போது மகள் பெர்லின் காணாமல் போனதை கண்டு, தந்தை ஆண்டனி அதிர்ச்சி அடைந்தார்.
கிறிஸ்தவ ஆலயத்தில் பெண் குழந்தை மாயம் - குழந்தையை அழைத்து சென்ற பெண் யார்?
x
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஆண்டனி சார்லஸ் என்பவர் மனைவி மற்றும் 3 வயது மகள் பெர்லினுடன் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட போது  மகள் பெர்லின் காணாமல் போனதை கண்டு ஆண்டனி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விசாரித்த தனிப்படை போலீசார் ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, ஒரு பெண் பெர்லினை அழைத்து செல்வது போல் இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்