வீரப்பன் குறித்து துப்பு கொடுத்த சண்முகப்பிரியா - அறிவித்த பரிசுகளை வழங்காத மத்திய-மாநில அரசுகள்

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த தகவல்களை காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய-மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என கோவையைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர் தெரிவித்துள்ளார்.
வீரப்பன் குறித்து துப்பு கொடுத்த சண்முகப்பிரியா - அறிவித்த பரிசுகளை வழங்காத மத்திய-மாநில அரசுகள்
x
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பனின் நடமாட்டம், வீரப்பனுக்கு கண்பார்வை குறைந்தது உள்ளிட்ட விவரங்களை அதிரடி படையினருக்கு அளித்துள்ளார். இதன் அடிப்படையில் 2004-ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உயிரை பணையம் வைத்து காவல்துறைக்கு உதவிய தமக்கு மத்திய - மாநில அரசுகள் அறிவித்த பரிசுதொகை வீட்டுமனை பதக்கம் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என சண்முகப்பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்