மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு : திருவள்ளூர் ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மக்கள் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு : திருவள்ளூர் ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்
x
திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அத்திப்பட்டு புதுநகர் பகுதியில்,  மாவட்ட ஆட்சியரை மக்கள் முற்றுகையிட்டனர். அந்த பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதாரத் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்