துணை வேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு கே.பி. அன்பழகன் பதில்
துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
தர்மபுரியில், தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் துணை வேந்தர் நியமனத்திற்கும், உயர் கல்வித்துறைக்கும் சம்பந்தம் இல்லை என்றார். துணை வேந்தரை நியமிப்பது ஆளுநர் தான் என்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்தார்.
Next Story