எப்போது அறிவித்தாலும் தேர்தல் நடத்த தயார் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

திருப்பரங்குன்றம் , திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து இன்று அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
எப்போது அறிவித்தாலும் தேர்தல் நடத்த தயார் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
* திருப்பரங்குன்றம் , திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து இன்று அறிவிப்புகள்  வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பதாக ஆணையம் தெரிவித்தது.  இடைத்தேர்தல் குறித்து , தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தலைமை  செயலாளருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது..  

* வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால், மூத்த அதிகாரிகள் அனைவரும் அது தொடர்பான பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டால் அங்கு மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்றும் தலைமை செயலாளர் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே தேர்தல் அறிவிப்பு தள்ளி போய் உள்ளது.. இருப்பினும் இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப் பட்டாலும் , அதை நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்