சென்னை : பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்...

டெல்லியைச் சேர்ந்த நிருபமா என்ற பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை : பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்...
x
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு  விமானம் புறப்பட இருந்தது. இதில் பயணம் செய்ய டெல்லியைச் சேர்ந்த நிருபமா என்ற பெண் வந்தார். அவரது உடமைகளை மத்திய தொழிற்படை பாதுகாப்பு பிரிவினர் சோதனை செய்தபோது, அதில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, துப்பாக்கி தோட்டா தவறுதலாக வந்துவிட்டதாக அவர் தெரிவித்ததை அடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார்,  நிருபமாவிடம் எழுதி வாங்கி விட்டு, அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்