ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை - ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு

பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசாரிடம் தொழிலதிபர் ரன்வீர்ஷா இன்று ஆஜராகவில்லை.
ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை - ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு
x
சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு, தந்தை இறந்ததால் சடங்கிற்காக ரன்வீர்ஷா வடமாநிலம் சென்றுள்ளதாகவும், வரும் 21-ம் தேதிக்கு பிறகு ஆஜராவார் எனவும் கூறினார். ஆனால், குற்றவியல் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறி வழக்கறிஞரின் கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். எனினும், பேச்சுவார்த்தைக்கு பிறகு வரும் புதன்கிழமையன்று ரன்வீர்ஷா நேரில் ஆஜராக வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கூறியதை ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்