வயலில் மேய்ந்த மாடுகளை ஒரு குடும்பமே சேர்ந்து கத்தியால் வெட்டிய சம்பவம்

வயலில் புகுந்து பயிர்களை மேய்ந்த மாடுகளை ஒரு குடும்பமே சேர்ந்து கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயலில் மேய்ந்த மாடுகளை ஒரு குடும்பமே சேர்ந்து கத்தியால் வெட்டிய சம்பவம்
x
திருவண்ணாமலை பல்லவன் நகர் பகுதியில் வசிப்பவர்,வேணுகோபால். இவரது, நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கறவை மாடுகள்  அடிக்கடி மேய்ச்சலுக்கு வந்துள்ளன. இது குறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேய்ச்சலுக்கு வந்த கறவை மாடுகளை வேணுகோபால், அவரது மனைவி சங்கரி மற்றும் மகன் காமேஷ் ஆகியோர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாடுகளின் உரிமையாளர், போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து, வேணுகோபால், சிவசங்கரி மற்றும் காமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தனது வயலுக்குள் புகுந்த காரணத்திற்காக கறவை மாடுகளை ஒரு குடும்பமே சேர்ந்து வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்