நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - 9 பேர் விடுதலை ஏன்?

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - 9 பேர் விடுதலை ஏன்?
x
ராஜ்குமார் கடத்தல் வழக்கை விசாரித்த, கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்ற நீதிபதி மணி, 9 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரின் மனைவி பர்வதம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறியுள்ளார். 

அரசு சார்பில் முதல் தகவல் அறிக்கை மிக காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாக தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும்  வீரப்பனுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் என்ன என்பது உள்ளிட்ட பல உண்மைகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் குறித்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார். அரசு தூதுவராக சென்ற  பலரை போலீசார் விசாரிக்கவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தகுந்த ஆதாரங்கள் சேர்க்கப்படாததால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி மணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்