குடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை - மகளை கைது செய்து போலீசார் விசாரணை
காரைக்குடியில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கொன்றதாக மகளை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. அவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள் கற்பகவள்ளி, கிரைண்டர் கல்லை தலையில் போட்டு தனது தந்தையை கொலை செய்ததாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றிய போலீசார் கற்பகவள்ளியை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story