அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்டக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்டக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
x
* கோவை மாவட்டம், இருப்பாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், தனக்கு கிடைத்த குடும்ப சொத்துக்கு பட்டா கேட்டு, அங்குள்ள வட்டாட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், அரசு நிலம் என கூறி பட்டா மறுக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

* மேலும், அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்டக் கூடாது எனவும் அரசு நிலங்கள் மக்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். அதேபோல, ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து மீட்க மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும் அரசு நிலத்திற்கு  பட்டா பதிவு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்