திருப்பூர் : சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருப்பூர் : சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை
x
வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

ஏத்தக்கோவில், தெப்பம்பட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இந்த திடீர் மழையாலும் அதை தொடர்ந்து குளிர் காற்று வீசுவதாலும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊட்டி : பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
ஊட்டியில் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

அங்கு கடந்த  ஒரு வாரமாக வெயிலுடன் கூடிய சீதோஷ்ன நிலை நிலவி வந்தத நிலையில் திடீரென மழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்