பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டப்பட்ட மதுக்கடையை,  போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்
x
அரியலூர் மாவட்டம், செந்துறையின் மையப்பகுதியில் வீட்டின் ஒரு பகுதியில் இயங்கி வந்த மதுக்கடையை மூட வேண்டும் என, அப்பகுதி பெண்கள், உரிமையாளர் கோபியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த கடையை பொதுமக்கள் துணையோடு கடந்த ஆண்டு, கோபி பூட்டினார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக செந்துறை பகுதியில், 11 மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த செந்துறை பகுதிபெண்கள், மூடப்பட்ட கடைக்கு பதிலாக கூடுதலாக கடைகள் திறக்கப்பட்டதாகவும், எனவே பழைய மதுக்கடையை மீண்டும் திறந்து கொள்ளுமாறும்  வீட்டு உரிமையாளர் கோபியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மதுக்கடையை திறக்க கோபி அனுமதி கோரிய நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் மதுக்கடையை திறந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்