ஸ்டெர்லைட் ஆலைக்குள் தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் தருண் அகர்வால் தலைமையிலான 3 நபர் குழு இன்று ஆய்வு நடத்தியது.
ஸ்டெர்லைட் ஆலைக்குள் தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு
x
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி வந்த ஆய்வுக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் உப்பாற்று ஓடையில் ஆய்வு செய்தனர். 

இதனையடுத்து இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துகேட்க உள்ளனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்