சென்னை : நாய்கள் குரைத்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்..!
சென்னையில் கொள்ளை முயற்சியின் போது நாய்கள் குரைத்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர்.
வேளச்சேரி மதியழகன் தெரு பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் திருடர்கள் ஈடுபட முயன்றனர். ஆனால் வீட்டில் இருந்த நாய் குரைத்ததால் வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் கொள்ளையர்கள் உடனே ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story