கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தடையை அமல்படுத்தாவிட்டால் காவல் ஆணையர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் - உயர்நீதிமன்றம்

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தடையை அமல்படுத்தாவிட்டால் மாநகர காவல் ஆணையர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது...
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தடையை அமல்படுத்தாவிட்டால் காவல் ஆணையர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் - உயர்நீதிமன்றம்
x
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் என்பவர், தங்கள் பகுதியில் உள்ள மசூதியில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சென்னை நகரில் உள்ள  கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூம்பு  வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்துவதை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார். தவறினால் சென்னை மாநகர காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதி, வழக்கின்  விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்