குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளுடன் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளித்த தாய்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரத்தில் சுமதி என்ற பெண் தனது குழந்தைகளுடன் தீக்குளித்துள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளுடன் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளித்த தாய்
x
சுமதி மற்றும் அவரின் கணவர் கார்த்திக் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி, நேற்று இரவு  தன் மீதும் தனது குழந்தைகள், பூவரசன் மற்றும் நிலா ஆகியோர் மீதும் மண்ணெண்ணய் ஊற்றி தீவைத்துள்ளார். குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த  அக்கம்பக்கத்தினர், மூவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்