பெரியார் சிலையை அவமதித்ததாக கைதான ஜெகதீசன் யார் ?

சென்னையில் பெரியார் சிலை மீது காலணியை வீசியதாக கைது செய்யப்பட்ட ஜெகதீசன் குறித்த கூடுதல் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது.
பெரியார் சிலையை அவமதித்ததாக கைதான ஜெகதீசன் யார் ?
x
சேலம் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஜெகதீசன் சேலம் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்துள்ளார். 2010-ம் ஆண்டு சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த அவர் 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஜெகதீசனின் மனைவி ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 

கடந்த மூன்று ஆண்டுகளாக தான் பாஜகவில் உறுப்பினராக உள்ளதாக போலீசார் விசாரணையில் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். பெரியாரின் கொள்கைகள் பிடிக்காததால் அவரது சிலைக்கு மாலைகள் அணிவிப்பதை தன்னால் ஏற்க முடியவில்லை என்று போலீஸார் விசாரணையில் ஜெகதீசன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்