சென்னை : 5 டன் காப்பர் கம்பி திருட்டு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

ஆதம்பாக்கத்தை சேர்ந்த அப்துல் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 டன் காப்பர் கம்பிகள் திருடு போனது.
சென்னை  : 5 டன் காப்பர் கம்பி திருட்டு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
x
சென்னை குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் வயர்களில் இருந்து காப்பர் மற்றும் அலுமினியங்களை பிரித்து எடுக்கும் நிறுவனம் உள்ளது. ஆதம்பாக்கத்தை சேர்ந்த அப்துல் என்பவருக்கு சொந்தமான அந்த நிறுவனத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 டன் காப்பர் கம்பிகள் திருடு போனது. இது குறித்து போலீஸில் அப்துல் புகார் அளித்தார். 

இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது பக்கத்து நிறுவனத்தின் இரும்பு தகடுகள் வழியாக 3 மர்ம நபர்கள் நுழைந்து, காப்பர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்