பெரியார் சிலை மீது பைக்கில் வந்த இளைஞர் காலணி வீச்சு

சென்னையில் பெரியார் சிலை மீது இளைஞர் ஒருவர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
பெரியார் சிலை மீது பைக்கில் வந்த இளைஞர் காலணி வீச்சு
x
பெரியார் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து வருகின்றர். இந்நிலையில், காலை 10  மணி அளவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது இளைஞர் ஒருவர், பெரியார் சிலை மீது, காலணியை வீசினார். உடனே, அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அந்த இளைஞரை தாக்கினர். உடனே, அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த ஜெகதீசன் என்ற வழக்கறிஞர் என தெரியவந்தது. இதற்கிடையே, அண்ணா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.




Next Story

மேலும் செய்திகள்