ஈரோட்டில் பிடிபட்டது 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் விஷ தன்மை மிக்க 6 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியம் பாம்பு பிடிபட்டுள்ளது.
ஈரோட்டில் பிடிபட்டது 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் விஷ தன்மை மிக்க 6 அடி நீளமுள்ள கண்ணாடிவிரியம் பாம்பு பிடிபட்டுள்ளது. குள்ளம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் அரசு போக்குவரத்து கழக ஊழியரான திருமூர்த்தி என்பவரது வீட்டின் சுவர் அருகே பாம்பு ஊர்ந்து வந்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் வருவதற்குள், திருமூர்த்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை பிடித்து கூடையில் அடைத்து வைத்திருந்தார். பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, பாம்பை மாதேஸ்வரன் கோயில் அருகே உள்ள அடர்ந்த காட்டில் விட இருப்பதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்