மின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்
வேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
வேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இன்று அதிகாலை ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து, முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதவிருந்தது. இதனை தவிர்க்க ஓட்டுநர் வலதுபுறமாக பேருந்தை திருப்பியுள்ளார். இதில் கட்டுபாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரமுள்ள மின் கம்பத்தின் மீது மோதியது.மின் கம்பத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story