தமிழகம் முழுவதும் பல்வேறு மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை...

புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை.
தமிழகம் முழுவதும் பல்வேறு மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை...
x
புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து  கடலூர், சேலம், கோவை    மத்திய சிறைகளில் சுமார் 2 மணி நேரம் போலீசார்  சோதனை மேற்கொண்டனர். கடலூரில், டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் 3 குழுக்காக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கைதிகளிடம் இருந்து சிம் கார்டுகள், செல்போன் பேட்டரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சேலம் மத்திய சிறையில், துணை ஆணையர் சுந்தர மூர்த்தி தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். கோவை மத்திய சிறையில், எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள சமையலறை, குளியலறை, கைதிகள் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்  சோதனை நடத்தப்பட்டது. 


தமிழகம் முழுவதும் பல்வேறு மத்திய சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை




Next Story

மேலும் செய்திகள்