மதுபானக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்

திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பிரதானசாலையில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடை நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அகற்றப்பட்ட மதுக்கடையை திருபுவனம் தென்றல் நகரில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
மதுபானக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்
x
திருபுவனம் பகுதி மக்கள் தென்றல் நகரில் மதுபானகடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர்,  திருபுவனத்தில் மதுபானக்கடையை திறக்கமாட்டோம் என்று பதில் வரும் வரை அங்கிருந்து செல்லமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்