பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி : கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை ஏற்றம்
பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி லாரிகள் வாடகை அதிகரித்துள்ளதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை குறையாத பட்சத்தில் காய்கறிகள் விலை உயரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story