செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு

விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு
x
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை  தங்கள் பகுதி வழியாக எடுத்துசெல்லக்கூடாது என ஒருதரப்பினர் கூறியதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால், கார்கள், ஏ.டி.எம். மையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர், மது போதையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொள்வோர், மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்