நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி : காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு

நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கோவையில் காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு நடத்ததினர்.
நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி : காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு
x
நாளை விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கோவையில் காவல் துறையினரின் அடையாள கொடி அணிவகுப்பு நடத்ததினர். துடியலூர் நகரில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வெள்ளகிணர் குட்டையில் கரைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் 300க்கு மேற்பட்ட காவல் துறையினர் நகரின் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் கண்ணீர் புகை, தண்ணீர் பீரங்கி வாகனங்கள் உள்ளிட்டவை அணிவகுத்து சென்றன.

Next Story

மேலும் செய்திகள்