இமானுவேல் சேகரனின் 61-வது நினைவு தினம் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரனின் 61-வது நினைவு தினம் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி
x
* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில்  தமிழக அரசு  சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன்,  ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி,   நாடாளுமன்ற உறுப்பினர்  அன்வர்ராஜா உள்ளிட்டோர்  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  

* முன்னதாக, இமானுவேல் சேகரனின் சொந்த ஊரில் இருந்து அமைதி பேரணியாக வந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அனைத்து கட்சி தலைவர்களும்  அஞ்சலி செலுத்த வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  5 மாவட்டங்களை சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்தும் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்