மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மூதாட்டியை கடத்தி நகை பறிப்பு

கோவில்பட்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, மூதாட்டியை கடத்தி நகை பறித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மூதாட்டியை கடத்தி நகை பறிப்பு
x
கோவில்பட்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மூதாட்டியை கடத்தி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனுஷ்கோடியாபுரம் பகுதியில் வசித்து வரும் 85 வயதான மூதாட்டி சீதாலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரைப்பற்றி தெரிந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் சீதாலட்சுமியிடம் பேச்சு கொடுத்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவதாக கூறியுள்ளார். சீதாலட்சுமி ஆட்டோவில் ஏறியவுடன் எட்டரை பவுன் நகையை பறித்து விட்டு அவரை சாலையின் ஓரத்தில் விட்டு சென்றுள்ளனர். தப்பியோடிய மர்ம நபர் மற்றும் அவருடன் வந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்