தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மழை...
காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை இடுயுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை இடுயுடன் கூடிய கனமழை பெய்தது. சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
குன்னூர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தேயிலை மகசூலுக்கு ஏற்ற மழை என்பதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்துர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story