மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்

ஆற்று மணல் அள்ளுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மணல் அள்ள தடை விதிக்க கோரி வழக்கில் விருதுநகர் ஆட்சியருக்கு நோட்டீஸ்
x
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்த சதன உடையார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவில், குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு, மணல் அள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்