தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
x
* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பண்ணாரி சோதனைச் சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. உள்ளூர் பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.

* ஒசூரிலும், கர்நாடக -தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளும், கட்டணங்களை இருமடங்காக உயர்த்தியுள்ளதால், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள காய்கறி மற்றும் பூச்சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுவதால், பயணிகள் வெளியூர் செல்வதில் சிரமமில்லை.

Next Story

மேலும் செய்திகள்