57 பவுன் நகைகளை திருடிய கடை ஊழியர் - வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே கைவரிசை

சென்னை நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே 57 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
57 பவுன் நகைகளை திருடிய கடை ஊழியர் - வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே கைவரிசை
x
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் புதுச்சேரியை சேர்ந்த ரபீக் என்ற நபர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடையில் உள்ள நகைகளை எடை மதிப்பீடு செய்த போது 57 சவரன் மதிப்பு கொண்ட 12 செயின்கள் மாயமானது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ரபீக்கும் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நகைகளை ரபீக் திருடிச் சென்றதாக நகைக்கடை தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரபீக்கை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்த ரபீக் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Article-Inline-AD


Next Story

மேலும் செய்திகள்