வேகமாக பேருந்தை இயக்கியதில் மாணவன் படுகாயம் - கிராம மக்கள்
கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையில் பேருந்தில் மாணவர் ஏறும்போது, ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான்.
கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையில் பேருந்தில் மாணவர் ஒருவர் ஏறும்போது, ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கியதில் கற்பகநாதன் என்ற பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அரசு பேருந்து ஒன்று பள்ளி மாணவர்களை பாதிவழியில் இறக்கி விட்டதால் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story