நெருங்கும் தீபாவளி : சூடு பிடிக்கும் பட்டாசு உற்பத்தி

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி சூடுபிடித்துள்ளது.
நெருங்கும் தீபாவளி : சூடு பிடிக்கும் பட்டாசு உற்பத்தி
x
வருகிற நவம்பர் ஆறாம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் இந்த ஒரு நாளை நம்பி ஆண்டு முழுவதும் உழைத்து வருகின்றனர். தற்போது பண்டிகை நெருங்கி வருவதால் ஆர்வமுடன் படுவேகத்தில் பட்டாசு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தாண்டு , பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தொழிலாளர்கள்  தெரிவித்துள்ளனர்.  பட்டாசு மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களால், இந்தாண்டு பட்டாசுகள் 5 சதவீதம் விலை உயரும் என பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்