மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஆசிரியரே தற்கொலைக்கு காரணம் என கடிதம்

வேலூர் மாவட்டத்தில் ,11-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு, ஆசிரியரே காரணம் என கூறி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஆசிரியரே தற்கொலைக்கு காரணம் என கடிதம்
x
வேலூர் அருகே உள்ள பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்த அருண்பிரசாத் என்ற மாணவன் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த விசாரணையில் சக மாணவர்கள் ​கொடுத்த தகவலின் பேரில், போலீஸார் அவரது ​வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, மாணவன் எழுதி வைத்த கடிதம் கண்டெக்கப்பட்டது. அதில் தான் தற்கொலை செய்வதற்கு உயிரியல் ஆசிரியர் குமார் தான் காரணம் என்றும்,  தனது சாதி பெயரை சொல்லி அவர் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்