கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டம் : வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், 'ஆழ்வார்கள் ஆய்வு மையத்தை' நடத்தி வருகிறார். இந்த மையத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் புகழ் வணக்க கூட்டம் நடைபெற்றது. அதில் வைணவ மரபுப்படி முற்றோதுதல் நிகழ்வு நடந்தது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story