புதுக்கோட்டை : பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன்..!
பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த சிறுவன் அரசு மருத்துவர்களின் முயற்சியால் உயிர் பிழைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆனைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிமீனாள். ஒன்றாம் வகுப்பு படித்து வந்த அவரது மகன் மதன்குமார், விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.
இதில் சுயநினைவை இழந்த சிறுவனுக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
சிறுவனை பரிசோதித்த குழந்தைகள் நல பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையிலான குழு, உரிய சிகிச்சைகளை வழங்கியது. இதில் சிறுவன் குணமாகி உள்ளதால் மருத்துவர்களுக்கு அவரது தாய் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story