சென்னை : பறக்கும் ரயிலை கவிழ்க்க சதி..!

சென்னையில், பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பறக்கும் ரயிலை கவிழ்க்க சதி..!
x
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு புறப்பட ரயில் ஒன்று தயாராக இருந்தது. அப்போது, தண்டவாளத்தில் கல் ஒன்று இருப்பதை கண்டு ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். 

உடனே ரயிலை விட்டு இறங்கி அந்த கல்லை அப்புறப்படுத்திய பின்னர் ரயிலை இயக்கியுள்ளார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. சமூக விரோதிகள் மதுபானம் அருந்த பறக்கும் ரயில் நிலைய வளாகத்தை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. போதை ஆசாமிகள் யாரும் கல்லை வைத்து சென்றனரா? அல்லது ரயிலை கவிழ்க்க விஷமிகள் சதி செய்தனரா? என திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்