புதுக்கோட்டையில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம் மூடல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டது. மத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், தமிழக குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு வரை ஆட்சியர் அனுமதி பெற்று குழந்தைகள் காப்பகம் நடத்தியதும், தற்போது அனுமதி இல்லாமல் அந்த காப்பகம் செயல்பட்டு வந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து காப்பகத்திற்கு அனுமதி பெற அதன் உரிமையாளர் ரவீந்திரன் மற்றும் அவரின் மனைவிக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story