பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் : கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு மாநகர பேருந்தில் பட்டாகத்தியுடன் பயணித்து பெரும் சர்சையை ஏற்படுத்திய 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் : கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
x
சென்னையில் கத்தியுடன் மாநகர பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களில் ஆனந்த்ராஜ், தாமோதரன், ராஜா உள்ளிட்டோர், கெல்லீஸ் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். 

மாநகர பேருந்தில் கத்தியுடன் பயணித்து ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, வண்ணாரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஜார்ஜ்டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, 17 வயதுக்கும் குறைவான ஆனந்த்ராஜ், தாமோதரன், ராஜா ஆகிய 3 பேரை, கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியிலும், 19 வயதான சிவாவை புழல்சிறையிலும் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவையடுத்து, சிவா புழல்சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்