திருமாவளவன் ஆராய்ச்சிக்கு தற்காலிக சான்று
திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.
திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார். இதனிடையே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது முன்னாள் துணை வேந்தர் சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் ஆய்விற்கு பிறகு, திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஒருவரின் ஆய்வு கட்டுரை தவறு என்றாலும், பட்டத்தை நிறுத்தி வைக்க முடியாது என்றும், மற்றொருவர், அவரது பார்வையில் வேண்டுமானால், இன்னொரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக துணை வேந்தர் பாஸ்கர் விளக்கம் அளித்தார்.
Next Story