ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள் பலி - ஒருவர் மாயம்
தஞ்சையில் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
தஞ்சையில் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். தஞ்சையைச் சேர்ந்த விவேக், கிருபாகரன், செல்வகுமார் ஆகியோர், 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று வெண்ணாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, விவேக், கிருபாகரன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். செல்வகுமார், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, மாயமானான். இந்நிலையில் கிருபாகரனின் பாட்டி ராஜேஸ்வரி, பேரன் இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
Next Story