கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்
x
மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மூட்டை, மூட்டையாக சாராய பாக்கெட்டுகளை தரங்கம்பாடி சாலையில் கொட்டினர். ஆக்கூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாவும், இது தொடர்பாக போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்