காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது போன்று காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
x
பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது போன்று, காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் உடனடியாக ஆய்வு செய்து மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேறு ஏதேனும் இடங்களில் உடைப்பு  ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை பணியாளர்கள் சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்