தொழிலதிபரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற 8 பேர் கைது

சென்னையில், தொழில் அதிபர் ஒருவரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
தொழிலதிபரின் காரை மறித்து கொள்ளையடிக்க முயன்ற 8 பேர் கைது
x
கடந்த ஜூன் மாதத்தில், சென்னை பட்ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் என்பவர், கிண்டி ரேஸ்கோர்சில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹரிஷ் குமாரின் காரை மறித்த மர்ம நபர்கள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஹரிஷ், தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனக் கூற, அவரது செல்போனை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், எட்டு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்